தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

மெகபூபா முப்தியின் வீட்டுக்காவல் மேலும் நீட்டிப்பு: மு.க.ஸ்டாலின் கண்டனம்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் வீட்டுக்காவல் மேலும் நீட்டிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

News image
Updated On :31 ஜூலை 2020, 2:02 pm

DIN

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் வீட்டுக்காவல் மேலும் நீட்டிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 

கடந்த வருடம் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370யை மத்திய அரசு நீக்கியதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீரின் பல முக்கியத் தலைவர்கள் பொதுபாதுகாப்பு சட்டத்தின் கீழ் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டனர். முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, அவரது தந்தை பரூக் அப்துல்லா ஆகியோர் கடந்த வருடம் வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டு கடந்த மார்ச் மாத இறுதியில் பின்னர் விடுவிக்கப்பட்டனர். 

இதேபோல் கடந்த வருடம் ஆகஸ்ட் 5 தேதி முதல் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வீட்டுக்காவலில் உள்ளார் முகபூபா முப்தி. தற்போதைய கட்டத்தில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் ஆகஸ்ட் 5 ஆம் தேதியுடன் முடிவடைகின்றன. இந்நிலையில் மெகபூபாவின் வீட்டுக்காவலை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 

இந்த நிலையில் மெகபூபா முப்தியின் வீட்டுக்காவல் மேலும் நீட்டிக்கப்பட்டதற்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டரில், காஷ்மீரில், மெகபூபா முப்தி மற்றும் பிற அரசியல் தலைவர்களைத் தொடர்ந்து தடுப்புக் காவலில் வைத்திருப்பதற்கு எனது உறுதியான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஜனநாயகத்தின் குரல்கள் ஒடுக்கப்பட்டும், அவர்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டும் ஓராண்டாகிறது. எதிர்க்கட்சிகளை ஒடுக்குவதற்காக பொதுப் பாதுகாப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதை தி.மு.க. எதிர்க்கிறது. இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.