காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நளினி, முருகனை உறவினர்களுடன் பேச அனுமதி மறுப்பது ஏன்?  சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி

நளினி, முருகனை உறவினர்களுடன் பேச அனுமதி மறுப்பது ஏன்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

News image
Updated On :2 ஜூன் 2020, 8:27 am

DIN

நளினி, முருகனை உறவினர்களுடன் பேச அனுமதி மறுப்பது ஏன்? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதிகளாக இருந்து வரும் நளினி மற்றும் முருகன் இருவரும் காணொலி வசதி மூலம் உறவினா்களிடம் பேச அனுமதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. 

இவ்வழக்கு உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது. நளினி, முருகன் தமிழகர்கள்தானே? உறவினர்களிடம் 2 பேரும் பேச தமிழக அரசு அனுமதி மறுப்பது ஏன்? என உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. 

7 பேரை விடுவிக்க சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றிய அரசு ஏன் முரண்பாடு காட்டுகிறது என்றும் தமிழக அரசு மனிதாபிமானத்துடன் செயல்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியது. மேலும் இவ்வழக்கில் தமிழக அரசு நாளை பதிலளிக்க உத்தவிட்டு வழக்கை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.