தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவுகளை மீறியதாக 5,62,233 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், விதிமுறைகளை மீறுவோா் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். அந்த வகையில் காவல்துறையினர் இதுவரை 5,62,233 வழக்குகளில் 6,04,769 பேரை கைது செய்துள்ளனா்.
மேலும் அவர்களிடமிருந்து இதுவரை 4,57,641 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதோடு ரூ.11.13 கோடி வரை அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.