இந்த நிலையில் ஒரு சில மாவட்டங்களில் அதிகம் பயணிகளை ஏற்றிச் சென்ற நடத்துநர்கள், ஓட்டுநர்கள் பணியிடை நீக்கம் செய்யப்படுவதாகவும் தகவல் வெளியாகி வருகிறது. இதனால் நாமக்கல், சேலம் மாவட்டங்களில் இயங்கும் அரசு பேருந்துகளில் 31 பேர் இருக்கையில் அமர்ந்து பயணிப்பவராகவும், 10 பேர் நின்றபடி பயணம் செய்பவர்களாகவும் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். அதற்கு மேல் பயணிகளை ஏற்றாததால் ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் காலை, மாலை வேளைகளில் பயணிகள் கூட்டம் அதிகம் காணப்படுகிறது. கூடுதல் பேருந்துகளும் இல்லாததால் மக்கள் தவிப்புக்குள்ளாகின்றனர்.