மதுரையில் கரோனாவிற்கு இருவர் பலி
மதுரையில் கரோனா வைரஸ் தொற்றுக்கு இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.


மதுரையில் கரோனா வைரஸ் தொற்றுக்கு இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
மதுரை முனிச்சாலை சி.எம்.ஆர் சாலை பகுதியைச் சேர்ந்தவர் 88 வயது மூதாட்டி. இவருக்கு திடீரென்று உடல்நலக் குறைவால் ஏற்பட்டதால், சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு திங்கள்கிழமை வந்துள்ளார். அவரை மருத்துவர்கள் பரிசோதித்ததில், கரோனா அறிகுறி இருந்துள்ளது.
அவருக்கு கரோனா பரிசோதனைச் செய்ததில், தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் அரசு கரோனா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று அதிகாலை 5 மணிக்கு மூதாட்டிக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
முதியவர் பலி
முன்னதாக மதுரை அனுப்பானடி பகுதியைச் சேர்ந்த 70 வயது முதியவர், உடல்நலக் குறைவு ஏற்பட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்த போது, கரோனா அறிகுறி இருந்துள்ளது. இதையடுத்து, அவர் ஜூன் 11ஆம் தேதி அரசு கரோனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் தொற்று இருப்பதை மருத்துவர்கள் ஜூன் 12ஆம் தேதி உறுதி செய்தனர். முதியவருக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம், மூச்சுத் திணறல் நோய்களின் பாதிப்பு இருந்ததால், அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி முதியவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...