லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ஆலங்குடி அருகே கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் தாய் உள்பட 7 பேர் கைது

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் அவரது தாய் உள்ளிட்ட 7 பேரை செவ்வாய்க்கிழமை காவல்துறை கைது செய்துள்ளனர்.

News image
கோப்புப்படம்
Updated On :16 ஜூன் 2020, 12:16 pm

DIN

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் கல்லூரி மாணவி தற்கொலை செய்துகொண்ட வழக்கில் அவரது தாய் உள்ளிட்ட 7 பேரை செவ்வாய்க்கிழமை காவல்துறை கைது செய்துள்ளனர்.

ஆலங்குடி அருகேயுள்ள திருவரங்குளம், இடையன்வயலைச் சேர்ந்த நாகேஷ்வரன் மகள் சாவித்திரி (19) கல்லூரி மாணவியான இவரும், தோப்புக்கொல்லையைச் சேர்ந்த தொழிலாளியான ராஜேந்திரன் மகன் விவேக் (20) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். இருவரும், வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், இவர்களது காதலுக்கு இருவீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கடந்த வாரம்  வீட்டைவிட்டு வெளியேறிய இருவரும் கோவைக்கு சென்றுள்ளனர். 

அப்போது, கரூர் மாவட்டம், குளித்தலையில் கரோனா தடுப்பு பணிக்காக வாகன சோதனையில் ஈடுபட்ட காவல்துறை காரை  நிறுத்தி விசாரணை செய்துள்ளனர். அப்போது விவேக்கிற்கு, திருமண வயது நிறைவடையாதது தெரியவந்துள்ளது. தொடர்ந்து, காவல்துறை இருவரின் பெற்றோரையும் அழைத்து, இருவரையும் அனுப்பி வைத்துள்ளனர். 

இதனால், மனமுடைந்த நிலையில் இருந்த சாவித்திரி ஜூன் 11-ம் தேதி  இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தொடர்ந்து, வருவாய்த்துறையினருக்குத் தகவல் தெரிவிக்காமல் சாவித்திரியின் உடலை அவரது உறவினர்கள் எரித்துவிட்டனராம்.

இதுகுறித்து திருவரங்குளம் கிராம நிர்வாக அலுவலர் இளையராஜா அளித்த புகாரைத் தொடர்ந்து, ஆலங்குடி காவல்துறை, தற்கொலையை மறைத்தல், தடையங்களை அழித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, சாவித்திரியின் தாய் சாந்தி (47), உறவினர்களான விஜயா (36), சிதம்பரம் (59), நடேசன் (59), கருப்பையா (70), ரெங்கசாமி (47), திருமலைராயசமுத்திரத்தைச் சேர்ந்த முருகன் (46) ஆகியோரை கைது செய்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.