எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின் ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,200 குறைவுபோா் விமானங்களுக்கு வானிலேயே எரிபொருள் நிரப்பும் தொழில்நுட்பம்: அமெரிக்க நிறுவனத்துடன் மும்பை நிறுவனம் ஒப்பந்தம்வீட்டை குத்தகைக்கு விடுவதாக ரூ.14.5 லட்சம் மோசடி: ஒருவா் கைதுசட்டப்பேரவைத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை நாளில் கொல்கத்தாவுக்கு வர முடியுமா?அமித் ஷாவுக்கு மம்தா மருமகன் சவால்காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!இந்தியா-நியூஸிலாந்து இடையே ஏப். 27-ல் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்
/

தமிழகத்துக்கு ரூ. 9,000 கோடி தேவை: பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி கோரிக்கை

தமிழகத்தில் கரோனாவை எதிர்கொள்வதற்கும், பொருளாதார இழப்பை ஈடுகட்டவும் ரூ. 9,000 கோடி தேவை என்று பிரதமரிடம் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

News image
Updated On :17 ஜூன் 2020, 11:50 am


தமிழகத்தில் கரோனாவை எதிர்கொள்வதற்கும், பொருளாதார இழப்பை ஈடுகட்டவும் ரூ. 9,000 கோடி தேவை என்று பிரதமரிடம் முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மாநில முதல்வர்களுடன் 2-வது நாளாக இன்று (புதன்கிழமை) ஆலோசனை நடத்தினார். காணொலி வாயிலாக நடைபெற்ற இன்றையக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமியும் பங்கேற்றார். 

அப்போது பிரதமரிடம் முதல்வர் பழனிசாமி வைத்த முக்கியக் கோரிக்கைகள்:

  • மருத்துவ உபகரணங்கள் வாங்க ஏற்கெனவே கோரியிருந்த ரூ. 3,000 கோடி வழங்க வேண்டும்.
  • தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ், 2-வது தொகுப்பு நிதியை விடுவிக்க வேண்டும். 
  • கரோனா வைரஸ் நோய்த் தொற்றை எதிர்கொள்ளவும், அதனால் ஏற்படும் பொருளாதார இழப்பை ஈடுகட்டவும் தமிழகத்துக்கு ரூ. 9,000 கோடி ஒதுக்க வேண்டும்.
  • மார்ச் மாதத்துக்கான ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையை தற்போது விடுவிக்க வேண்டும்.
  • கரோனாவை எதிர்கொள்வதற்காக தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து உடனடியாக ரூ. 1,000 கோடி வழங்க வேண்டும்.
Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.