ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

கோயில்களைத் திறக்கக் கோரி நெல்லையில் நூதன போராட்டம்

தமிழகத்தில் கோயில்களை பொதுமக்கள் வழிபாட்டுக்குத் திறக்கக் கோரி திருநெல்வேலியில் நூதன போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :17 ஜூன் 2020, 7:25 am

DIN

தமிழகத்தில் கோயில்களை பொதுமக்கள் வழிபாட்டுக்குத் திறக்கக் கோரி திருநெல்வேலியில் நூதன போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

கரோனா தீநுண்மி பரவுவதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் சில தவறுகள் உடன் பொது முடக்கம் அமலில் உள்ளது. இதனால் தமிழகத்தில் கோயில்கள் தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்கள் பொதுமக்கள் வழிபாட்டுக்காகத் திறக்கப்படவில்லை. 

கோயில்களைத் திறக்க வலியுறுத்தியும், உலக நன்மைக்காக வேண்டியும் இந்து தேசிய கட்சி சார்பில் திருநெல்வேலியில் மண்சோறு சாப்பிடும் நூதன போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அந்த அமைப்பின் நிறுவனத் தலைவர் மணி தலைமையில் திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயில் முன்பு புதன்கிழமை இன்று தேசிய கட்சியினர் திரண்டனர். 

கோயில் முன்பு தேங்காய் பழம் உடைத்துச் சிறப்பு வழிபாடு செய்த பின்பு தரையில் உணவைக் கொட்டி மண்சோறு சாப்பிடும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து காவல்துறை நடத்திய பேச்சு வார்த்தைக்குப் பின்பு கட்சியினர் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.