மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

திருப்புவனத்தில் தெப்பக்குளம் பிரச்னை: திமுக கூட்டணிக் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

திருப்புவனத்தில் மட்டை ஊரணியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள தெப்பக்குளத்தை நிர்வாகம் செய்ய விதிமுறைகளுக்கு முரணாக தனியார் அறக்கட்டளைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

News image
Updated On :18 ஜூன் 2020, 11:01 am

DIN

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் மட்டை ஊரணியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள தெப்பக்குளத்தை நிர்வாகம் செய்ய விதிமுறைகளுக்கு முரணாக தனியார் அறக்கட்டளைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டதைக் கண்டித்து திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

திருப்புவனம் மட்டை ஊரணி இருந்த இடத்தில் தற்போது தெப்பக்குளம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தெப்பக்குளத்தை நிர்வாகம் செய்வதற்காக தனிநபர்கள் 11 பேர் கொண்ட அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளதைக் கண்டித்தும் திருப்புவனம் பகுதியில் சவடு மண் குவாரியிலிருந்து நடக்கும் மணல் கொள்ளையை தடுக்கக்கோரியும் திருப்புவனம் பேரூராட்சி அலுவலகத்தில் ஒப்பந்தப்புள்ளி கோரப்படாமல் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெறுவதைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. 

ஆர்ப்பாட்டத்துக்கு திமுக மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன் தலைமை தாங்கினார், ஆர்ப்பாட்டத்தில் திமுக ஒன்றிய செயலாளர் கடம்பசாமி, நகர்ச் செயலாளர் நாகூர்கனி, மீனவரணி அமைப்பாளர் அண்ணாமலை, மதிமுக ஒன்றிய செயலாளர் சேகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் அய்யம்பாண்டி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் சுந்தரலிங்கம், விவசாயிகள் சங்க நிர்வாகி ஜெயராமன், விசிக ஒன்றிய செயலாளர் கண்ணன், திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பொற்கோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மேற்கண்ட பிரச்னைகளைக் கண்டித்து கோஷம் எழுப்பினர். திமுக மாவட்ட துணைச் செயலாளர் சேங்கைமாறன் கூறுகையில் மட்டை ஊரணியில் கட்டப்பட்டுள்ள தெப்பக்குளத்துக்கு வரும் 26ந் தேதி குடமுழுக்கு நடக்கவுள்ளது. 

பொதுமுடக்கம் உத்தரவு அமலில் உள்ள நிலையில் இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து அன்றைய தேதியில் திமுக கூட்டணிக் கட்சிகள் சார்பில் திருப்புவனத்தில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.