பெண்கள் முன்னேற்றத்துக்கு அரசு துணை நிற்கிறது: முதல்வர் ஸ்டாலின் மகளிர் நாள் வாழ்த்துமாமல்லபுரத்தில் சுற்றுலாத் தலங்களை மக்கள் இன்று கட்டணமின்றி பார்வையிட அனுமதிமார்ச் முதல் வாரத்தில் வளைகுடா நாடுகளிலிருந்து 52,000 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்: மத்திய அரசுசமயபுரம் மாரியம்மன் திருக்கோயிலில் பூச்சொரிதல் விழா தொடங்கியதுகுடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மகளிர் நாள் வாழ்த்து!பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

வாகன நெரிசல்: பரனூர் சுங்கச்சாவடியில் கட்டணம் ரத்து

சென்னையில் இருந்து செங்கல்பட்டு செல்ல ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதால், பரனூர் சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :18 ஜூன் 2020, 10:14 am

DIN

சென்னையில் இருந்து செங்கல்பட்டு செல்ல ஏராளமான வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்பதால், பரனூர் சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இன்று நள்ளிரவு முதல் சென்னையில் முழு ஊரடங்கு நடைமுறைக்கு வருவதால், ஏராளமான மக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டுச் செல்கின்றனர்.

இதனால், சென்னை - செங்கல்பட்டு இடையேயான பரனூர் சுங்கச் சாவடியில் ஏராளமான வாகனங்கள் பல மணி நேரமாக சாலையில் நீண்ட வரிசையில் நிற்பதால், சுங்கக் கட்டணம் வசூலிக்க முடியாமல் ஊழியர்கள் திணறி வந்தனர்.

நீண்ட நேரமாக வாகனங்கள் சாலையில் காத்து நிற்பதால், பரனூர் சுங்கச்சாவடியில் வாகனங்களுக்கு கட்டணத்தை ரத்து செய்து காவல்துறை எஸ்.பி. கண்ணன் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.