சென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!மதுரை அருகே அரசு பேருந்தும் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதல்: 5 பேர் பலி எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது! தமிழ்நாட்டில் பொறியியல் கலந்தாய்வு தொடங்கியது! விம்பிள்டன் டென்னிஸ்: சின்னர் மீண்டும் சாம்பியன் எழுத்தாளர் பூமணி காலமானார்
/

விழுப்புரத்தில் கரோனா அதிகரிப்பைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்: மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதைத் தடுக்க மீண்டும் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார். 

News image

விழுப்புரம் அனைத்து துறை அதிகாரிகள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை ஆலோசனை

Updated On :23 ஜூன் 2020, 5:07 pm IST

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதைத் தடுக்க மீண்டும் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார். 

கரோனா தொற்றுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 606 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 பேர் இறந்துள்ளனர். சென்னை உள்ளிட்ட பகுதியிலிருந்து திரும்புவோரால், தொற்று அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மீண்டும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. வட்டாட்சியர்கள் தலைமையில் 8 குழுக்கள் அமைத்துக்  கண்காணிப்பு  தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு  ஏற்படுத்த வேண்டும். 

குறிப்பாக விழுப்புரம் நகரப்பகுதியில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தல் மற்றும் மருத்துவ பரிசோதனை செய்யப்படும். கிருமி நாசினி தெளித்து மாத்திரைகள் வழங்கப்படும்.

காய்ச்சல் தொண்டை வலி வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என, விழுப்புரத்தில் இன்று நடைபெற்ற  அனைத்து துறை அதிகாரிகள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் விரிவான ஆலோசனை வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.