எல்பிஜி தட்டுப்பாடு எதிரொலி: புணேயில் எரிவாயு தகன மையங்களை மூட உத்தரவு!சென்னையில் வணிக எரிவாயு சிலிண்டர் விநியோகத்தை நிறுத்துவதாக இந்தியன் ஆயில் கார்பரேஷன் நிறுவனம் அறிவிப்புபெங்களூரில் வணிக சிலிண்டர்கள் நிறுத்தம்! நாளை முதல் ஹோட்டல்கள் மூடல்! மும்பையில் தட்டுப்பாடு!தேர்தலுக்காக மட்டும் நாம் கூட்டணி வைக்கவில்லை, கொள்கைக்காக கூட்டணி வைத்துள்ளோம் - மு.க. ஸ்டாலின்மகளிர் உரிமைத் தொகையை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது : மு.க. ஸ்டாலின்திமுக ஆட்சியில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு : திருச்சியில் மு.க. ஸ்டாலின் பேச்சுதலைசிறந்த வரலாற்றாசிரியர்களில் ஒருவரும் எழுத்தாளருமான கே.என். பணிக்கர் இன்று (மார்ச் 9) காலமானார். அவருக்கு வயது 89.சுவாமிமலை கோயிலில் 2 மின்தூக்கிகள் அமைக்க ரூ. 3.55 கோடியா? அண்ணாமலை கேள்விராகுல் மீதான அவதூறு வழக்கு: மார்ச் 12-ல் விசாரணை!
/

விழுப்புரத்தில் கரோனா அதிகரிப்பைத் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும்: மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதைத் தடுக்க மீண்டும் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார். 

News image
விழுப்புரம் அனைத்து துறை அதிகாரிகள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை ஆலோசனை
Updated On :23 ஜூன் 2020, 11:37 am

DIN

விழுப்புரம் மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதைத் தடுக்க மீண்டும் தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார். 

கரோனா தொற்றுக்கு விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 606 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 12 பேர் இறந்துள்ளனர். சென்னை உள்ளிட்ட பகுதியிலிருந்து திரும்புவோரால், தொற்று அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த மீண்டும் தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. வட்டாட்சியர்கள் தலைமையில் 8 குழுக்கள் அமைத்துக்  கண்காணிப்பு  தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு  ஏற்படுத்த வேண்டும். 

குறிப்பாக விழுப்புரம் நகரப்பகுதியில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படும். தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தல் மற்றும் மருத்துவ பரிசோதனை செய்யப்படும். கிருமி நாசினி தெளித்து மாத்திரைகள் வழங்கப்படும்.

காய்ச்சல் தொண்டை வலி வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறி உள்ளவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டும் என, விழுப்புரத்தில் இன்று நடைபெற்ற  அனைத்து துறை அதிகாரிகள் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் விரிவான ஆலோசனை வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.