பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

தந்தை - மகன் கொலை: உரிய நீதி வழங்கப்படும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உறுதி

விசாரணைக் கைதிகள் மரணம் அடையும் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் உயர் நீதிமன்ற மதுரை கிளை, தந்தை - மகன் கொலையில் உரிய நீதி வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளது

News image

தந்தை - மகன் கொலை: உரிய நீதி வழங்கப்படும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உறுதி

Updated On :27 ஜனவரி 2024, 10:20 pm IST


மதுரை: விசாரணைக் கைதிகள் மரணம் அடையும் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கும் உயர் நீதிமன்ற மதுரை கிளை, தந்தை - மகன் கொலையில் உரிய நீதி வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளது.

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட தந்தை -  மகன், சிறைச்சாலையில் மரணம் அடைந்த சம்பவம் குறித்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிமன்றம் இன்று தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு ஏற்றது.

இன்று காலை இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், தமிழக காவல்துறை டிஜிபியும் தூத்துக்குடி காவல்துறை கண்காணப்பாளரும், மதியம் 12.30 மணியளவில் காணொலி காட்சி மூலம் ஆஜராக உத்தரவு பிறப்பித்திருந்தனர்.

மீண்டும் மதியம் வழக்கு விசாரணைக்கு வந்த போது, விசாரணை கைதிகள் மரணம் அடையும் சம்பவங்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும். அவற்றுக்குத் தேவையான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு உருவாக்க வேண்டும்.

தந்தை - மகன் கொலை வழக்கில் உரிய நீதி வழக்கப்படும் என உயர் நீதிமன்றக் கிளை உறுதி அளிக்கிறது.

இந்த சம்பவத்தில் தூத்துக்குடி எஸ்.பி. ஜூன் 26ம் தேதிக்குள் நிலை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதோடு, பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் பிரேத பரிசோதனையின் விடியோ பதிவையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

தந்தை - மகன் கொலைச் சம்பவம் தொடர்பாக நடைபெறும் விசாரணையை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கண்காணிக்கும் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

சாத்தான்குளம் அரசடி விநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜெயராஜ் (58), மகன் பென்னிக்ஸ் (31). இவர் அப்பகுதியில் செல்போன் கடை நடத்தி வந்தார். மரக்கட்டை வியாபாரம் நடத்தி வந்தார். கடந்த 19ஆம் தேதி ஊரடங்கு விதிகளை மீறி கடையை திறந்து வைத்தது தொடர்பாக காவல்துறையினர் பென்னிக்ஸ் மற்றும் அவரது தந்தை ஜெயராஜையும் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று உள்ளனர். காவல் நிலையத்தில் பென்னிக்ஸ் முன் அவரது தந்தை ஜெயராஜை காவல்துறையினர் அடித்ததாக கூறப்படுகிறது.

இதனை தட்டி கேட்ட பென்னிக்ஸ்க்கும் காவல் துறைக்கும் வாக்குவாதம் முற்றவே காவல் துறையினர் பென்னிக்ஸை பிடித்து பல மணி நேரம் கட்டி வைத்து அடித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர் மீது வழக்குப் பதிவு செய்து, கைது செய்து கோவில்பட்டி கிளை சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிறையில் அவருக்கு திங்கள்கிழமை இரவு 9 மணியளவில் நெஞ்சுவலி ஏற்பட்டதாகக் கூறி, சிறைக் காவலர்கள் அவரை காவல்நிலையத்துக்குப் பின்னால் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் பலியானார்.‌

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பென்னிக்சின் தந்தை ஜெயராஜ் செவ்வாய்க்கிழமை காலை மரணமடைந்தார். 

இதையடுத்து கோவில்பட்டி கிளை சிறையில் உயிரிழந்த தந்தை, மகன் உடல்களை, 3 மருத்துவா்கள் அடங்கிய குழு பிரேதப் பரிசோதனை செய்ய சென்னை உயா் நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.