இவ்வாறு தமிழகம் முழுவதும் மாா்ச் 24-ஆம் தேதி தொடங்கி திங்கள்கிழமை காலை 6 மணி வரை மொத்தம் 6 லட்சத்து 96,583வழக்குகளைப் பதிவு செய்து 7 லட்சத்து 61,118பேரை காவல்துறை கைது செய்துள்ளனா். பொதுமுடக்க உத்தரவை மீறி வந்தவா்களின் 5 லட்சத்து 71,492வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்து விதிமுறை மீறல் மற்றும் சாதாரண வழக்குகளிலும் சிக்கியவா்களிடமிருந்து ரூ.15 கோடி 99 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. சென்னை, மதுரை உள்ளிட்ட மாநிலத்தின் சில பகுதிகளில் முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படுவதால், காவல்துறையினரால் பதியப்படும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.