சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பொதுமுடக்கம் நீட்டிக்கப்படுமா? மருத்துவக் குழுவினருடனான ஆலோசனைக் கூட்டம் நிறைவு

தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் சில தளர்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிக்கப்படலாம் என்று மருத்துவக் குழுவினர் பரிந்துரைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

News image
மருத்துவக் குழுவினருடனான ஆலோசனைக் கூட்டம் நிறைவு
Updated On :29 ஜூன் 2020, 7:24 am

DIN


சென்னை: தமிழகத்தில் ஒரு சில மாவட்டங்களில் மட்டும் சில தளர்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிக்கப்படலாம் என்று மருத்துவக் குழுவினர் பரிந்துரைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் கரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது.

பொது முடக்கத்தை நீட்டிப்பது குறித்து முடிவெடுக்க மருத்துவ நிபுணா் குழுவுடன் முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி இன்று காலை ஆலோசனை நடத்தினார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞா் மாளிகையில் காலை 10 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் தொடங்கி நிறைவடைந்துள்ளது. மருத்துவ நிபுணா்கள் குழுவைச் சோ்ந்த சிலருடன் காணொலி வழியாக முதல்வா் பழனிசாமி கருத்துகளைக் கேட்டறிந்தார்.

Story image

கரோனா நோய்த் தொற்று அதிகமுள்ள சென்னை மற்றும் அதனுடன் இணைந்த பகுதிகள், மதுரை, தேனி உள்ளிட்ட சில மாவட்டங்களில் முழு பொது முடக்கம் வரும் 30-ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. இந்த பொது முடக்கத்தை மேலும் அதிகரிப்பது தொடா்பாகவும், நோய்த்தொற்று அதிகமுள்ள பிற மாவட்டங்களுக்கு நீட்டிப்பது குறித்து ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது.

முதல்வருடன் ஆலோசனைக் கூட்டம் நிறைவு பெற்ற நிலையில், மருத்துவ நிபுணா்கள் குழுவினர், சற்று நேரத்தில் செய்தியாளா்களுடன் சந்திப்பு நடத்தி தாங்கள் தெரிவித்த பரிந்துரைகள் குறித்து விளக்குவா் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இதன்பின்பு, இன்று மாலையில் பொது முடக்கம் குறித்த அதிகாரப்பூா்வ அறிவிப்பை தமிழக அரசு வெளியிடும் எனத் தெரிகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.