கட்சி தொடங்குவது குறித்து மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் மேற்கொண்ட ஆலோசனைக் கூட்டம் நிறைவு பெற்றது.
சென்னை, கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினிகாந்த் தலைமையில் இன்று காலை 10 மணியளவில் கூட்டம் தொடங்கியது. இதில், 37 மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் நிறைவடைந்த பின்னர் போயஸ் கார்டனில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த ரஜினிகாந்த், 'ஓராண்டுக்குப் பிறகு மாவட்டச் செயலாளர்களை சந்தித்தேன். நிறைய விஷயங்களை பரிமாறிக்கொண்டோம். மாவட்டச் செயலாளர்களின் சந்தேகங்களுக்கு பதில் அளித்தேன். ஒரு விஷயத்தில் மட்டும் எனக்கு தனிப்பட்ட முறையில் ஏமாற்றமாக இருந்தது. அது என்னவென்று பின்னர் கூறுகிறேன். மற்ற வகையில், இது ஒரு இனிமையான சந்திப்பு.
நாட்டில், சகோதரத்துவம், அன்பு, அமைதி நிலவ வேண்டும். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்ய வேண்டும். அவர்களது கோரிக்கைக்கு ஏற்ப, நாட்டில் அமைதி நிலவ உறுதுணையாக இருப்பேன் என்று கூறினேன். சி.ஏ.ஏ. குறித்து ஆராய்ந்து பிரதமர் மோடி, அமித் ஷாவிடம் பேச்சுவார்த்தை நடத்த இஸ்லாமிய அமைப்பிடம் கூறினேன்' என்றார்.
இறுதியாக செய்தியாளரின் கேள்விக்கு பதில் அளித்த அவர், தமிழகத்தில் வெற்றிடத்தை நிரப்புவது குறித்து காலம் தான் பதில் சொல்ல வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தொகுதி அலசல் ஸ்ரீபெரும்புதூா்... முனைப்பு காட்டும் காங்கிரஸ்; விடாமுயற்சியுடன் அதிமுக!

திருச்செங்கோடு தொகுதியில் அனைத்து கிராமங்களுக்கும் நேரில் சென்று குறைகளைக் கேட்டு நிவா்த்தி செய்வேன்: ஈ.ஆா். ஈஸ்வரன்

எஸ்ஐஆருக்கு நன்றி!

நொய்டாவில் மாணவா் நீரில் மூழ்கி பலி: விசாரணை நடத்த தாய் கோரிக்கை!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


