டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தமிழகத்தில் சிறந்த நிர்வாகம் உள்ளதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை: அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகத்தில் சிறந்த நிர்வாகம் உள்ளதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

News image
அமைச்சர் ஜெயக்குமார்
Updated On :17 மார்ச் 2020, 5:13 am

DIN

தமிழகத்தில் சிறந்த நிர்வாகம் உள்ளதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க சுகாதாரத்துறை மற்றும் சமூக நலத்துறை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக சுற்றுலாத் தலங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்ட பொதுமக்கள்கூடும் இடங்கள் திங்கள்கிழமை முதல் மூடப்பட்டன. இந்தியாவில் இந்த வைரஸுக்கு இதுவரை 125 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இதுகுறித்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், தொற்று நோய்களை எதிர்கொள்ளும் ஆற்றல் தமிழக அரசு மருத்துவர்களிடம் உள்ளது. தமிழகத்தில் சிறந்த நிர்வாகம் உள்ளதால் மக்கள் அச்சப்பட தேவையில்லை. அரசின் உத்தரவுகளை மதிக்காதவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும். இவ்வாறு அவர் கூறினார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.