கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ஊரடங்கு உத்தரவை மீறியவர்களுக்கு திருப்பூரில் நூதன தண்டனை

144 தடை உத்தரவை மீறி கடையநல்லூரில் சுற்றித்திரிந்த முதியவரை போலீஸார் கைது செய்தனர்.

News image
Updated On :25 மார்ச் 2020, 10:50 am

DIN

ஊரடங்கு உத்தரவு மீறி வெளியே சுற்றி வந்த நபர்களை கவனித்து நாற்காலி போல் சாலையில் 5 நிமிடம் நிற்க வைத்து எச்சரித்து அனுப்பிய போலீசார்.

உலக நாடுகளை அச்சுருத்தி வரும் கொரோனாவைரசின் பரவுதலை இந்தியாவில் கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக இன்றுமுதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தின் பல இடங்களிலும் இருசக்கர வாகனத்தில் பயனிப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து இருந்தது. பலமுறை எச்சரித்தும் கேட்காததால் திருப்பூர் புஷ்பா ரவுண்டானா பேருந்துநிலையம் பகுதிகளில் மாநகர வடக்கு உதவி  ஆணையர் நவீன் தலைமையிலான போலிசார் அவர்களை தடுத்து நாற்காலி போல நிற்க வைத்தனர். பின்னர் அவர்களை கவனித்து அனுப்பி வைத்தனர்.  

மாவட்டம் முழுவதும் இதுபோன்று சிலஇடங்களில் இருசக்கர வாகனங்களில் வந்த வாலிபர்களை தடுத்துநிறுத்திய போலிசார் அவர்களுக்கு நல்ல கவனிப்பு செய்து பின்னர் அனுப்பிவைத்தனர். இதன் மூலம் அனாவசியமாக இருசக்கர வாகனங்களில் பயனிப்போரின் எண்ணிக்கை குறையும் என்பதால் போலீசார் இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.