இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஈரோடு பேருந்து நிலையத்தில் நாய்களுக்கு உணவு கொடுத்த மாநகராட்சி ஊழியர்

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் நடமாட்டம் முற்றிலும் முடங்கி இருக்கிறது. 

News image
Updated On :29 மார்ச் 2020, 9:31 am

DIN

நாடு முழுவதும் கரோனா பாதிப்பு பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது. ஊரடங்கு உத்தரவால் பொதுமக்கள் நடமாட்டம் முற்றிலும் முடங்கி இருக்கிறது. 

ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு பேருந்து நிலையம், ஈரோடு ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகள் முற்றிலும் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளாக தடை செய்யப்பட்டு இருக்கின்றன. இந்தநிலையில் ஈரோடு பேருந்து நிலையத்தில் சுற்றித்திரிந்த நாய்களுக்கு மாநகராட்சி பெண் ஊழியர் ஒருவர் பிஸ்கெட்டுகளை உணவாக கொடுத்தார். வழக்கமாக பேருந்து நிலைய கடைகள், பேருந்து நிலையத்துக்கு வரும் பொதுமக்கள் இந்த நாய்களுக்கு உணவுகள் வழங்குவார்கள். 

ஆனால் கடந்த 2 நாட்களாக பேருந்து நிலையம் முற்றிலும் மூடப்பட்டதால் நாய்களுக்கு உணவு வழங்க யாரும் இல்லை. நேற்றுக்காலை ஈரோடு பேருந்து நிலையத்துக்கு தூய்மை பணிக்காக வந்த தூய்மை பணியாளர் முத்துப்பிரியா என்பவர் நாய்களுக்கு பிஸ்கெட் வாங்கி கொடுத்தார். இதுபற்றி தூய்மை பணியாளர் முத்துப்பிரியா கூறும்போது, ஈரோடு பேருந்து நிலையத்தில் ஆதரவற்ற நாய்கள் பல உள்ளன. 

இங்குள்ள ஆட்டோ டிரைவர்கள், கடை உரிமையாளர்கள் பிரியாணி உள்ளிட்ட உணவுகளை வாங்கி வைப்பார்கள். ஆனால் இப்போது உணவு வழங்க யாரும் இல்லை. நான் பேருந்து நிலையத்துக்குள் வந்ததும், நாய்கள் பசியுடன் இருப்பதை பார்த்து பரிதாபமாக இருந்தது. எனவே பிஸ்கெட் வாங்கி கொடுத்தேன். அவையும் நன்றியுடன் என்னை சுற்றி சுற்றி வருகின்றன. 

பேருந்து நிலையம் முழுவதும் நான் தூய்மை பணி செய்யும்போது நாய்களும் என்னுடன் வருவதால் யாரும் இல்லையே என்ற அச்சம் இல்லாமல் பணியை மேற்கொள்கிறேன்.-இவ்வாறு அவர் கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.