மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

கரோனா: தமிழக ஆளுநர் ரூ.2 கோடி நிதியுதவி

கரோனா தடுப்பு பணிகளுக்காக மத்திய, மாநில அரசுகளுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலா ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

News image
Updated On :30 மார்ச் 2020, 9:52 am

DIN

கரோனா தடுப்பு பணிகளுக்காக மத்திய, மாநில அரசுகளுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலா ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா நோய்த்தொற்று தற்போது இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இதையடுத்து கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கரோனாவுக்கு இதுவரை 1071 பாதிக்கப்பட்ட நிலையில் 29 பேர் பலியாகியுள்ளனர்.

100 பேர் கரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். இந்த நிலையில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்காக மக்கள் நிதியுதவி அளிக்கலாம் என மத்திய, மாநில அரசுகள் வேண்டுகோள்விடுந்திருந்தன. இதையடுத்து பல்வேறு தரப்பினர் நிதியுதவி அளித்து வருகின்றனர்.

அந்த வகையில் கரோனா தடுப்பு பணிகளுக்காக மத்திய, மாநில அரசுகளுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலா ரூ.1 கோடி நிதியுதவி அளித்துள்ளார். இதன்படி பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியும், தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.1 கோடியும் ஆளுநர் நிதியுதவி வழங்கியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.