ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

அறிகுறி இன்றி பாதிக்கப்பட்டால் வீட்டிலேயே சிகிச்சை: தமிழக அரசு

அறிகுறி இல்லாமல் கரோனா பாதிப்புக்கு ஆளானவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :5 மே 2020, 7:26 am

DIN

அறிகுறி இல்லாமல் கரோனா பாதிப்புக்கு ஆளானவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத அளவு நேற்று மட்டும் 527 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. அதில், அதிகபட்சமாக சென்னையில்  266 பேருக்கும், கடலூரில்122 பேருக்கும் நோய்த்தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இந்த பாதிப்பு எண்ணிக்கை வரும் நாள்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக சென்னையில் பாதிக்கப்பட்ட 98 சதவீதம் பேருக்கு எந்தவித அறிகுறியும் தென்படவில்லை என மாநகராட்சி ஆணையர் தெரிவித்திருந்தார்.  இந்த நிலையில் அறிகுறி இல்லாமல் கரோனா பாதிப்புக்கு ஆளானவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 

இதன்படி எந்த அறிகுறியும் இல்லாதவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி சிகிச்சை தர ஏற்பாடு செய்யப்படும் என்றும் பாதிக்கப்பட்டோரும் அவர்களை கவனித்துக் கொள்வோரும் 10 நாள்கள் ஜின்க்-20எம்ஜி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. சென்னையில் அரசு மருத்துவமனைகளில் படுக்கை வசதிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில் அரசு இந்த முடிவு எடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.