மதுக்கடைகள் திறப்பு: கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள்
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும்


சென்னை: கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் சில தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழகத்தில் இன்று மதுபானக் கடைகள் திறக்கப்படுவதற்கு கருப்புக் கொடி ஏந்தி எதிர்க்கட்சிகள் தங்களது எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர்.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது இல்லத்தில் கருப்புக் கொடி ஏந்தி தனது எதிர்ப்பை பதிவு செய்தார். சமூக இடைவெளியைப் பின்பற்றி கருப்புக் கொடி ஏந்தி மதுபானக் கடைகள் திறக்கப்படுவதற்கு தங்களது எதிர்ப்பை பதிவு செய்யுமாறு ஸ்டாலின் நேற்று வலியுறுத்தியிருந்தார்.
அதன்படி, எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் அவர்களது வீடுகளில் இன்று கருப்புக் கொடி ஏந்தி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தலைமையில் இன்று மதுக்கடைகள் திறப்புக்கு எதிராக கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறக்கும் தமிழக அரசுக்கு எதிராக இன்று தனது இல்லத்தின் முன்பு கறுப்புச் சட்டை அணிந்து முழக்கங்கள் எழுப்பி அறப்போர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...