மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

தஞ்சாவூர் பெரியகோயிலில் கிருமி நாசினி தெளிப்பு

உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோயிலில் கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சனிக்கிழமை கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

News image
Updated On :9 மே 2020, 2:43 pm

உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரியகோயிலில் கரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சனிக்கிழமை கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

உலகப் பாரம்பரிய சின்னமாகவும், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களின் கட்டடக் கலைக்கு எடுத்துக்காட்டாகவும் திகழும் தஞ்சாவூர் பெரியகோயிலில் பிப். 5ஆம் தேதி குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதையொட்டி, இக்கோயிலுக்கு உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல், அயல் நாடு, வெளி மாநிலம், பிற மாவட்டங்களிலிருந்து நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து சென்றனர்.

இந்நிலையில், கரோனா வைரஸ் பரவல் காரணமாக சுற்றுலா தலங்கள், கோயில்கள் மூடப்பட்டதைப் போல, தஞ்சாவூர் பெரியகோயிலும் மார்ச் 18}ம் தேதி மூடப்பட்டது. ஏறத்தாழ 52 நாள்களாக இக்கோயில் மூடப்பட்டிருந்தாலும், கோயிலுக்குள் நாள்தோறும் நான்கு கால பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதேபோல, மாதம் இரு முறை பக்தர்கள் பங்கேற்பின்றி பிரதோஷ வழிபாடும் நடைபெறுகிறது.

இந்நிலையில், இந்து சமய அறநிலையத் துறை மற்றும் தொல்லியல் துறை கேட்டுக் கொண்டதற்கிணங்க, இக்கோயிலில் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் சனிக்கிழமை கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. இதில், நவீன டிராக்டர், சரக்கு ஆட்டோ மூலம் சுமார் 10,000 லிட்டர் கிருமி நாசினி கோயில் முழுவதும் தெளிக்கும் பணியில் மாநகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.