மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

மலேசியாவில் இருந்து திருச்சி புறப்பட்ட 177 பயணிகள்

கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு 177 பயணிகளுடன் சிறப்பு விமானம் புறப்பட்டது. 

News image
Updated On :9 மே 2020, 2:52 pm

கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு 177 பயணிகளுடன் சிறப்பு விமானம் புறப்பட்டது. 

வெளி நாட்டில் பணிபுரியும் தமிழா்கள், தமிழகம் திரும்ப அனுமதி பெறுவதற்கென உருவாக்கப்பட்ட இணையதளத்தில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா், தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்திருந்தனா். 

இந்த நிலையில் கோலாலம்பூரில் இருந்து திருச்சிக்கு 177 பயணிகளுடன் சிறப்பு விமானம் புறப்பட்டது. இந்த விமானத்தில் வரும் பயணிகள் அனைவருக்கும் திருச்சி விமான நிலையத்தில்  தயார் நிலையிலுள்ள சுகாதார துறை அதிகாரிகள் இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்கின்றனர். 

தொடர்ந்து அவர்களுக்கு தொற்று நோய் இல்லாத பட்சத்தில் அனைவரும் சேதுராப்பட்டியில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில் தனிமைப்படுத்தவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.