கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

நெருக்கடியிலிருந்து மீண்ட பிறகு தமிழகத்தை மீண்டும் உருவாக்குவோம்: முதல்வர் நம்பிக்கை

கரோனா தொற்று நெருக்கடியிலிருந்து மீண்ட பிறகு தமிழகத்தை மீண்டும் உருவாக்குவோம் என முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :10 மே 2020, 4:09 pm

DIN


கரோனா தொற்று நெருக்கடியிலிருந்து மீண்ட பிறகு தமிழகத்தை மீண்டும் உருவாக்குவோம் என முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிடுகையில்,

"கரோனா வைரஸ் நோய்த் தொற்றிலிருந்து மீண்டு வருவதால், தமிழகத்தை புனரமைப்பு செய்வதும், பொருளாதாரமும்தான் எங்களது முக்கியத்துவமாக இருக்கும். பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்காக உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்கவும் ஏற்கெனவே குழு அமைக்கப்பட்டுள்ளது.

வளர்ச்சியை நோக்கிய பாதையில் எடுக்கப்படவுள்ள பல்வேறு நடவடிக்கைகளில் இது முதற்கட்ட நடவடிக்கைதான். இக்கட்டான சூழ்நிலையிலிருந்தும் நாங்கள் மீண்டு வருவோம். இந்த நெருக்கடியிலிருந்து மீண்டு வந்த பிறகு தமிழகத்தை மீண்டும் உருவாக்குவோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.