தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

48 நாள்களுக்கு பின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிய மக்கள்!

கரோனா தொற்று பரவல் தொடர்பான பொது முடக்கத்தால் வீட்டிற்குள் அடைபட்டிருந்த மக்கள் கடைகள் திறக்க அரசு அனுமதி அளித்ததால் திங்கள்கிழமை முதல் தங்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.

News image
Updated On :11 மே 2020, 6:22 am

DIN

கரோனா தொற்று பரவல் தொடர்பான பொது முடக்கத்தால் வீட்டிற்குள் அடைபட்டிருந்த மக்கள் கடைகள் திறக்க அரசு அனுமதி அளித்ததால் திங்கள்கிழமை முதல் தங்களுடைய இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.

நாமக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்றால் இதுவரை 77 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 56 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர். இன்னும் 21 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மே 17-ஆம் தேதி வரை பொது முடக்கம் அமலில் இருப்பதாலும், நாமக்கல் மாவட்டம் சிகப்பு மண்டல பட்டியலில் உள்ளதாலும் மக்கள் வீட்டை விட்டு அதிகம் வெளியே வராமல் இருந்தனர். 

கடந்த 4-ஆம் தேதி வியாபார நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் செயல்படலாம் என அரசு உத்தரவிட்டதால் ஓரளவு நிம்மதியடைந்தனர். இதனைத் தொடர்ந்து தினசரி காலை 6 மணி முதல் மாலை 4 மணி வரையில், மக்கள் நடந்தும், வாகனங்களிலும் வெளியே வருவதை வாடிக்கையாக்கினர். திங்கள்கிழமை(மே 11) முதல் 34 வகையான கடைகள் திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்தது. 

அதன்படி நாமக்கல் மாவட்டத்தில், நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், பரமத்திவேலூர் உள்ளிட்ட நகரப் பகுதிகளில் சலூன், அழகு நிலையங்கள் தவிர்த்து மற்ற கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. 48 நாள்கள் வீட்டை விட்டு வெளியே வராமல், அவ்வாறு வந்தாலும் காவல்துறையின் கெடுபிடிகள், கரோனா அச்சம் போன்ற நெருக்கடிக்கு மக்கள் ஆளாகி வந்தனர். 

அதுமட்டுமின்றி, கோடை வெயில் கொளுத்தும் நிலையில் உடல் புழுக்கத்திலும், நல்ல காற்றை சுவாசிக்க முடியாமல், விரும்பியதை வாங்கி சாப்பிட முடியாமல் மனப்புழுக்கத்திலும் பலர் தவித்து வந்தனர். தற்போது பொது முடக்கம் ஒரு மண்டலத்தை கடந்துவிட்ட நிலையில் திங்கள்கிழமை காலை 6 மணி முதல் ஆண்களும், பெண்களும் சுதந்திர பறவைகளாக வாகனங்களில் பறந்து சென்ற வண்ணம் இருந்தனர்.

மேலும், அரசுத் துறை, தனியார் நிறுவன ஊழியர்கள், சிறு, குறு நிறுவனங்கள், வணிக நிறுவனங்கள், வியாபாரக் கடைகளில் பணியாற்றி வந்தவர்களும் மீண்டும் வேலைக்கு செல்கிறோம் என்ற ஆர்வமுடன் வெளியே வந்தனர். மக்களிடையே கரோனா அச்சம் மறைந்து போனது இதன்மூலம் தெரியவந்தது. மக்கள் தங்களுடைய இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதால் வியாபாரக் கடைகளில் கூட்டம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.