புழல் பகுதி அம்மா உணவகங்களுக்கு நிதியுதவி

புழல் பகுதியில் இயங்கும் அம்மா உணவகங்களுக்கு அதிமுக பிரமுகர் நிதியுதவி வழங்கினார்.
அதிமுக தலைமை பொதுக்குழு உறுப்பினரும், வடகரை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான மு.சுந்தர் ரூ.1 லட்சம் ரொக்கம் வழங்கினார்.
அதிமுக தலைமை பொதுக்குழு உறுப்பினரும், வடகரை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான மு.சுந்தர் ரூ.1 லட்சம் ரொக்கம் வழங்கினார்.
Published on
Updated on
1 min read

புழல் பகுதியில் இயங்கும் அம்மா உணவகங்களுக்கு அதிமுக பிரமுகர் நிதியுதவி வழங்கினார்.

சென்னை முழுவதும் இயங்கும் அம்மா உணவகங்களில் பொது முடக்கக் காலங்களில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து, அம்மா உணவகங்களுக்கு அதிமுக பிரமுகர்கள் நிதியுதவி வழங்கி வருகிறார்கள்.

இந்த நிலையில் சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலத்தில் உள்ள 22வது வார்டு புழல் பகுதியில் உள்ள 2 அம்மா உணவகங்களில் கடந்த 23 நாள்களாக வழங்கி வரும் இலவச உணவிற்கான தொகை ரூ.1 லட்சம் ரொக்கப் பணத்தை அதிமுக தலைமை பொதுக்குழு உறுப்பினரும், வடகரை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவருமான மு.சுந்தர் வழங்கினார். இதில் அதிமுக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் இருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com