உணவுக்கும், மருந்துக்கும், தங்கள் சொந்த ஊருக்குச் செல்லவும், அப்படித் தப்பித்தவறி திரும்பிச் சென்றவர்கள் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றிக் கொள்ளவும், 5000 ரூபாய் அவர்களின் வங்கிக் கணக்கிற்கே அனுப்பும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திட்டம்கூட இல்லை என்பது, ஏற்கனவே சூழ்ந்துள்ள சங்கடங்களுக்கிடையே சலிப்பை உருவாக்கி இருக்கிறது. ஆக மொத்தத்தில், “ஏழை - எளிய மக்களுக்கு எதுவுமில்லை; நடுத்தர மக்களுக்கு ஒன்றும் இல்லை. அவர்களெல்லாம் கைவிடப்பட்டு விட்டார்களோ”என்ற அளவில்தான் இன்றைய நிதியமைச்சரின் பத்திரிகையாளர் கூட்டம் நிறைவு பெற்றிருக்கிறது.