2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

தமிழகத்தில் 447 பேருக்கு கரோனா; 10 நாள்களில் முதல் முறையாக 500க்குக் கீழ் குறைந்தது

தமிழகத்தில் இன்று புதிதாக 447 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 நாள்களில் முதல் முறையாக இன்று கரோனா பாதிப்பு 500க்குக் கீழ் குறைந்துள்ளது.

News image
அமைச்சர் விஜயபாஸ்கர்
Updated On :14 மே 2020, 2:24 pm

DIN


சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 447 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 10 நாள்களில் முதல் முறையாக இன்று கரோனா பாதிப்பு 500க்குக் கீழ் குறைந்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் மட்டும் இன்று 363 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதிப்பு 5,625 ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா வைரஸ் நோய்த் தொற்றால் புதிதாக பாதிப்புக்குள்ளானோர் மற்றும் பலியானோர் பற்றிய சமீபத்திய தரவுகளை மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது. 

அதன்படி, தமிழகத்தில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் இன்று மேலும் 2 பேர் உயிரிழந்ததை அடுத்து, மாநிலத்தில் கரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 66 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 447 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதன் மூலம் சுமார் 10 நாட்களுக்குப் பிறகு தமிழகத்தில் கரோனா பாதிப்பு முதல் முறையாக 500க்கும் குறைவாக இன்று பதிவாகியுள்ளது.

அதே சமயம், தமிழகத்தில் கரோனா பாதித்து சிகிச்சை பெற்று வந்தவர்களில் அதிகபட்சமாக இன்று 64 பேர் குணமடைந்து மருத்துவமனைகளில் இருந்து வீடு திரும்பியுள்ளனர்.

இன்று சென்னையில் புதிதாக கரோனா பாதிப்பு மூலம் சென்னையில் ஒட்டுமொத்த பாதிப்பு 2,539 ஆக உயர்ந்துள்ளது. அதேபோலே தமிழகத்தில் கரோனா பாதிப்பு இன்று 9,674 ஆக உயர்ந்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை நெருங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.