புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி உறுதியானது!புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருப்பூரில் மின்சாரம் பாய்ந்து ஒப்பந்தத் தொழிலாளி பலி

திருப்பூர் குமார் நகர் துணை மின் நிலையத்தில் மின்சாரம் பாய்ந்ததில் ஒப்பந்தத் தொழிலாளி ஒருவர் புதன்கிழமை உயிரிழந்தார்.

News image

கோப்புப் படம்

Updated On :27 மே 2020, 2:04 pm

DIN

திருப்பூர் குமார் நகர் துணை மின் நிலையத்தில் மின்சாரம் பாய்ந்ததில் ஒப்பந்தத் தொழிலாளி ஒருவர் புதன்கிழமை உயிரிழந்தார்.

திருப்பூர், பி.என்.சாலையில் உள்ள அண்ணா நகரைச் சேர்ந்தவர் எஸ்.விவிதன்(31), இவருக்கு திருமணமாகி அபிராமி என்கிற மனைவியும், இரு பெண் குழந்தைகளும் உள்ளனர். விவிதன் திருப்பூர் மின்வாரியத்தில் 10 ஆண்டுகளாக ஒப்பந்தத் தொழிலாளியாக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில், திருப்பூர் குமார் நகரில் உள்ள துணை மின் நிலைய வளாகத்தில் உள்ள மின்கம்பத்தில் புதன்கிழமை மாலை பழுதை சரி செய்யச்சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்ததில் விவிதன் பலத்த காயமடைந்துள்ளார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர் அவர் ஏற்கெனவே உயிரிழந்தாகத் தெரிவித்தார். இதுகுறித்து திருப்பூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.