தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

அமைச்சர் துரைக்கண்ணு மறைவு: குடியரசு துணைத் தலைவர் இரங்கல்

தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். 

News image
அமைச்சர் துரைக்கண்ணு
Updated On :1 நவம்பர் 2020, 9:43 am

DIN

தமிழக வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவுக்கு குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இரங்கல் தெரிவித்துள்ளார். 

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தமிழக வேளாண்மைத் துறை அமைச்சா் துரைக்கண்ணு(72) சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை(அக்.31) இரவு காலமானார். 

அவரது மறைவுக்கு ஆளுநர், முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மாநிலங்களவைத் தலைவரும், குடியரசு துணைத் தலைவருமான வெங்கையா நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில், 

'தமிழக வேளாண் அமைச்சர் திரு துரைக்கண்ணுவின் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. அவர், அடித்தட்டு மக்கள் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பாடுபட்டார். அன்னாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல். ஓம் சாந்தி!' என்று பதிவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.