கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் நவ. 23ல் தொடங்கும்: அண்ணா பல்கலை

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் இணைப்புக் கல்லூரிகளில் சேரும் முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கு நவம்பர் 23-ம் தேதி வகுப்புகள் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

News image
முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் நவ. 23ல் தொடங்கும்: அண்ணா பல்கலை
Updated On :27 ஜனவரி 2024, 5:46 pm

DIN


அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பொறியியல் இணைப்புக் கல்லூரிகளில் சேரும் முதலாமாண்டு பொறியியல் மாணவர்களுக்கு நவம்பர் 23-ம் தேதி வகுப்புகள் தொடங்கும் என்று அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

2020 - 21-ஆம் கல்வியாண்டுக்கான அட்டவணையை திருத்தி வெளியிட்டிருக்கும் அண்ணா பல்கலைக்கழகம், பொறியியல் படிப்பில் சேரும் முதலாமாண்டு மாணவர்களுக்கு நவம்பர் 23-ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கும். பொறியியல் முதலாமாண்டு மாணவர்களுக்கான முதல் பருவம் என்பது 2021-ஆம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி வரை வகுப்புகள் நடத்தப்படும். இதையடுத்து மார்ச் 8-ம் தேதி முதல் பருவத் தேர்வுகள் தொடங்கும்.

இரண்டாவது பருவத்துக்கான வகுப்புகள் ஏப்ரல் 5-ம் தேதி தொடங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருக்கும் பள்ளி மற்றும் கல்வி நிலையங்களை நவம்பர் 16-ம் தேதி முதல் திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஒன்பதாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு நவம்பர் 16 முதல் பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.