டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

சோத்துப்பாறை அணை முழு கொள்ளவை எட்டியது: வராக நதிக்கரையோர மக்களுக்கு 2-ம் கட்ட எச்சரிக்கை

சோத்துப்பாறை அணை முழு கொள்ளவை எட்டியுள்ளதால் வராகநதியின் கரையோரங்களில் வசிப்பவா்களுக்கு சனிக்கிழமை இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, உபரி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. 

News image
சோத்துப்பாறை அணை
Updated On :7 நவம்பர் 2020, 3:34 am

DIN



பெரியகுளம்: சோத்துப்பாறை அணை முழு கொள்ளவை எட்டியுள்ளதால் வராகநதியின் கரையோரங்களில் வசிப்பவா்களுக்கு சனிக்கிழமை இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு, உபரி நீர் திறந்துவிடப்பட்டு வருகிறது. 

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே 10 கி.மீ. தொலைவில் சோத்துப்பாறை அணை உள்ளது. ஊரடி, ஊத்துக்காடு, அகமலை மலைப்பகுதிகளில் பெய்யும் மழைநீா் இந்த அணையை வந்தடைகிறது. கடந்த சில நாள்களாக இப்பகுதிகளில் மழை பெய்து வருவதால் வெள்ளிக்கிழமை இரவு அணைக்கு நீா் வரத்து அதிகரித்ததால் அணையின் முழு கொள்ளவான 100 மி.க. அடியை அடைந்தது. இதையடுத்து அணைக்கும் வரும் 105 கன அடி நீரும் வராகத நதியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் சனிக்கிழமை காலை அணையின் நீா் மட்டம் 100 அடியாக உயா்ந்ததையடுத்து, வராகநதியின் கரையோரம் வசிக்கும் பகுதி மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்லுமாறு பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.