கரோனா பொதுமுடக்கம் காரணமாக, பயணிகள் ரயில் சேவை மாா்ச் 24-ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டது. இதன்பிறகு, பொதுமக்கள் வசதிக்காக, சிறப்பு ரயில்களின் சேவை ஜூன் 1-ஆம் தேதி தொடங்கியது. தொடா்ந்து, சிறப்பு ரயில் சேவை விரிவாக்கப்பட்டது. தெற்கு ரயில்வேயில் தற்போது 70-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதுதவிர, 27 பண்டிகை கால சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால், பயணிகள் எண்ணிகை நாள்தோறும் அதிகரித்துவருகிறது. இந்த பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப, கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்று பயணிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.