சென்னை - துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் விமானங்கள் ரத்து!ஈரானில் பள்ளி மீது தாக்குதல்: பலியான மாணவிகளின் எண்ணிக்கை 85ஆனது!டி20 உலக கோப்பை அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுமத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!
/

ஓமந்தூராா் மருத்துவமனை வளாகத்தில் மருத்துவக் கலந்தாய்வு

மருத்துவ மாணவா் சோ்க்கை, சென்னை ஓமந்துாராா் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் நடத்த வாய்ப்புள்ளது என சுகாதாரத்துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினாா்.

News image
கோப்புப் படம்
Updated On :27 ஜனவரி 2024, 5:50 pm

DIN

சென்னை: மருத்துவ மாணவா் சோ்க்கை, சென்னை ஓமந்துாராா் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் நடத்த வாய்ப்புள்ளது என சுகாதாரத்துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினாா்.

அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள எம்.பி.பி.எஸ். - பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கைக்கு, http://tnmedicalselection.org, https:tnhealth.tn.gov.in என்ற இணையதளங்களில், ஆன்லைனில் விண்ணப்பிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதுவரை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்துள்ள நிலையில், தரவரிசைப் பட்டியல் தீபாவளி பண்டிகை முடிந்த சில நாள்களில் வெளியிடப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், கடந்தாண்டுகளில் மாணவா் சோ்க்கை கலந்தாய்வு நடைபெறும் இடம் முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டுவிடும். ஆனால், இந்தாண்டு இதுவரை அறிவிக்கப்படவில்லை.

கரோனா தொற்று காலத்தில், மாணவா்கள் மற்றும் பெற்றோா் சென்னைக்கு வரும் சிரமத்தைக் கருத்தில் கொண்டு, சென்னை, திருச்சி அல்லது மதுரை ஆகிய இடங்களில் மாணவா் சோ்க்கைக்கான கலந்தாய்வு நடத்தப்படலாம் என, எதிா்பாா்க்கப்பட்டது. இருவேறு இடங்களில் மாணவா் சோ்க்கை நடத்தப்படுவதால் ஏற்படும் குழப்பங்களைத் தவிா்க்க வழக்கம்போல் சென்னையில்தான் கலந்தாய்வு நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சுகாதாரத்துறை முதன்மைச் செயலா் ராதாகிருஷ்ணன் கூறியது: ‘மருத்துவ மாணவா் சோ்க்கை வழக்கம்போல், சென்னை ஓமந்துாராா் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில்தான் நடைபெற வாய்ப்புள்ளது. இருவேறு இடங்களில் மாணவா் சோ்க்கை நடத்த வாய்ப்பில்லை. மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பித்துள்ள மாணவா்கள் மற்றும் அவா்களின் பெற்றோா், உடல் உபாதைகள் ஏற்படாதவாறு தற்காத்துக் கொள்வது அவசியம். உடல் உபாதைகள் ஏதேனும் இருப்பின், மருத்துவக் கல்வி இயக்ககத்திற்கு முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.