ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

நகைக் கடைகளில் சோதனை: கணக்கில் வராத ரூ.500 கோடி வருமானம் கண்டுபிடிப்பு

சென்னையை தலைமையிடமாகக் கொண்டு நகைக்கடைகள் நடத்தி வரும் தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான 32 இடங்களில் கடந்த 10-ம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

News image
நகைக் கடைகளில் சோதனை: கணக்கில் வராத ரூ.500 கோடி வருமானம் கண்டுபிடிப்பு
Updated On :12 நவம்பர் 2020, 12:54 pm

DIN


சென்னை: சென்னையை தலைமையிடமாகக் கொண்டு நகைக்கடைகள் நடத்தி வரும் தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான 32 இடங்களில் கடந்த 10-ம் தேதி வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

சென்னை, கோவை, சேலம், நெல்லை, திருச்சி, மதுரை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட 32 இடங்களில் நடைபெற்ற வருமான வரிச் சோதனையில், கணக்கில் வராத 400 கோடி மதிப்பிலான 814 கிலோ நகை இருப்பில் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அது வரி அமைப்புக்குள் கொண்டு வரப்பட்டது.

மேலும், வருமானத்தை குறைத்துக் காட்டும் வகையில் வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனடிப்படையில், தனியார் நிறுவனம், கணக்கில் வராத ரூ.500 கோடி அளவுக்கு வருவாயை மறைத்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து இது குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என்றும் வருமான வரித்துறை செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை செளகாா்பேட்டை என்எஸ்சி போஸ் சாலையில் பிரபலமான நகைக் கடை உள்ளது. பல மாநிலங்களிலும் இங்கிருந்து நகை மொத்த வியாபாரம் செய்யப்படுகிறது.

இந்தக் கடையில் வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்யப்படுவதாகவும், தரமற்ற தங்க நகைகள் விற்கப்படுவதாகவும் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் வியாபார தொடா்பில் இருந்த மதுரை, திருநெல்வேலி, கடையநல்லூா், தென்காசி ஆகிய பகுதிகளில் உள்ள சிறு நகைக் கடைகள், கொல்கத்தா, கேரளம், தில்லி, மும்பை ஆகிய இடங்களில் உள்ள நகைக் கடைகள், வியாபாரிகளின் வீடுகள் உள்பட 32 இடங்களில் கடந்த 10-ம் தேதி சோதனை நடைபெற்றது.

இந்தச் சோதனையில் வரி ஏய்ப்பு தொடா்பாக பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். சோதனை பல இடங்களில் இரவையும் தாண்டி நீடித்தது. கணக்கில் வராத பணம், நகை, ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.