தெற்கு தில்லியின் ஷேக் சராய் கட்டம்-2 பகுதியில் உள்ள போக்குவரத்து ஆணைய கட்டடத்தின் பதிவு அறையில் தீ விபத்து ஏற்பட்டதாக தில்லி தீயணைப்பு சேவைகள் (டி. எஃப். எஸ்) அதிகாரி ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
இது குறித்து அவா் மேலும் கூறியதாவது: இந்தச் சம்பவத்தில் உயிா்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
வியாழக்கிழமை இரவு 9.31 மணிக்கு போக்குவரத்து ஆணையம் அலுவலகத்தில் இருந்து தீ விபத்து குறித்து அழைப்பு வந்தது. 9 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தன.
மேலும் தீ கட்டடத்திற்குள் ஒரு பதிவு அறையில் மட்டுமே இருந்தது. இரவு 11.20 மணியளவில் அது அணைக்கப்பட்டது. தீ விபத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து எந்த தகவலும் இல்லை, அதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றாா் அவா்.
தொடர்புடையது

ரோஹிணி: 4 மாடிக் கட்டடத்தில் தீ விபத்து
ரோஹிணியில் உணவகத்தில் தீ விபத்து

மும்பையில் 16 மாடிக் கட்டடத்தில் தீ விபத்து

தெற்கு தில்லி சந்தையில் தீ விபத்து! 50 கடைகள் எரிந்து நாசம்!
வீடியோக்கள்
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு


