ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

பல்லடம் கணபதிபாளையத்தில் தொழிலாளர் நலத்துறை அதிகாரி கைது

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கணபதிபாளையத்தில் தொழிலாளர் நலத்துறை துணை இயக்குநரிடம் இருந்து ரூ.4,39,500 பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News image
பல்லடம் கணபதிபாளையத்தில் தொழிலாளர் நலத்துறை துணை இயக்குநரை கைது செய்து லஞ்ச ஒழிப்பு காவலர்கள் விசாரணை நடத்தினர்.
Updated On :27 ஜனவரி 2024, 5:52 pm

DIN

பல்லடம்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கணபதிபாளையத்தில் தொழிலாளர் நலத்துறை துணை இயக்குநரிடம் இருந்து ரூ.4,39,500 பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்லடம் அருகேயுள்ள கணபதிபாளையத்தில் டி.கே.டி. மில் பேருந்து நிறுத்தம் அருகில் தொழிற்சாலைகள் ஆய்வாளர் அலுவலகம் உள்ளது. அவ்வலுவலகத்திற்கு வியாழக்கிழமை ஆய்வுக்கு வந்த திருப்பூர் 3வது பகுதி தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் தர்மேந்திரா (42) என்பவர் அப்பகுதியில் உள்ள தனியார் பின்னலாடை நிறுவனங்களிடமிருந்து தீபாவளி இனாம் வசூலித்து வருவதாக திருப்பூர் லஞ்ச ஒழிப்புத் துறை ரகசிய தகவல் கிடைத்தது. 

இதையடுத்து திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை டி.எஸ்.பி. தட்சணமூர்த்தி தலைமையில் காவல் ஆய்வாளர் கெளசல்யா மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு சென்று திடீர் ஆய்வு நடத்தினர். 

அப்போது தர்மேந்திராவிடம் இருந்து கணக்கில் வராத பணம் ரூ.4,39,500 இருப்பது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பல்லடம் கணபதிபாளையத்தில் தொழிலாளர் நலத்துறை துணை இயக்குநரை கைது செய்து லஞ்ச ஒழிப்பு காவலர்கள் விசாரணை நடத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.