கெஜலெட்சுமிக்கு வெள்ளிக்கவசம் சாற்றப்பட்டிருந்தது. உற்சவ தெட்சிணாமூர்த்தி தங்கக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதிகாலை முதல் மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், விருச்சிகம், மகரம், கும்பம் மற்றும் இதர ராசிக்காரர்கள் உள்ளிட்ட பக்தர்கள் திரளானோர் நீண்ட வரிசையில் நின்று குருபகவானை தரிசித்தனர். கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக தமிழக அரசின் கரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறை விதிகளின்படி ஆன்லைனில் முன் பதிவு செய்தவர்கள் மட்டுமே குருப்பெயர்ச்சி விழாவில் ஒரு மணிநேரத்திற்கு 200 பேர் வீதம் 14-ம்தேதி முதல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.