இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

திருச்சி இனிப்புக் கடை உரிமையாளர் மகன் தற்கொலை

திருச்சியில் பிரபல இனிப்புக் கடை உரிமையாளர் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து தில்லைநகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News image
திருச்சி இனிப்பு கடை உரிமையாளர் மகன் தூக்கிட்டுத் தற்கொலை
Updated On :16 நவம்பர் 2020, 8:44 am

DIN

திருச்சி: திருச்சியில் பிரபல இனிப்புக் கடை உரிமையாளர் மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தில்லைநகர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சியில் பிரபல இனிப்பு கடையின் உரிமையாளர் பத்ரிநாத் . இவரது மகன் முத்ரிநாத் (21). இவருக்குத் திருமணம் நிச்சயதார்த்தம் முடிவுற்று 20 நாளில் திருமணம் நடைபெற உள்ளது. இந்த திருமணத்தில் முத்ரிநாத்திற்கு உடன்பாடு இல்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று காலை வயலூர் முருகன் கோவிலுக்கு சென்ற முத்ரிநாத் தரிசனம் செய்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.  வீட்டு முதல் மாடியில் தனிமையில் இருந்த அவர் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தில்லை நகர் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.