டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கம்பத்தில் நெடுஞ்சாலை பள்ளத்தை சீர் செய்த போக்குவரத்து காவலர்: பொதுமக்கள் பாராட்டு

கம்பத்தில் நெடுஞ்சாலை பள்ளத்தை சீர் செய்த போக்குவரத்து காவலர் தாமரை மாணிக்கத்துக்கு : பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.

News image
கம்பத்தில் நெடுஞ்சாலை பள்ளத்தை சீர் செய்த போக்குவரத்து காவலர் தாமரை மாணிக்கம்.
Updated On :20 நவம்பர் 2020, 8:08 am

DIN

கம்பம்: கம்பத்தில் நெடுஞ்சாலை பள்ளத்தை சீர் செய்த போக்குவரத்து காவலர் தாமரை மாணிக்கத்துக்கு : பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.

தேனி மாவட்டம் கம்பம் கேரளாவின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. இதனால் கம்பம் வழியாக கேரளா மாநிலத்திற்கு நாள்தோறும் ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று  வருகின்றன.

மேலும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் அத்தியாவசிய தேவைகளுக்காக கம்பம் நகர் பகுதிக்கு வந்து செல்கின்றனர். இதனால் கம்பம் மெயின் ரோடு பரபரப்பாகவே காணப்படும்.

இந்நிலையில், கம்பம்மெட்டு சாலை பிரிவு, தலைமை தபால் அலுவலகம் அருகே பிரதான சாலையில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டிருந்தது. இந்த பள்ளத்தால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல், இருசக்கர வாகன விபத்துக்கள்  ஏற்பட்டு வந்தது.

இது குறித்து பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தனர். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை.

இதற்கிடையில் கடந்த ஒரு வாரமாக பரவலாக மழை பெய்து வருவதால் சாலைகளில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது.

இந்நிலையில், வியாழக்கிழமை சாலையில் உள்ள பள்ளத்தில் கனரக வாகனம் ஒன்று சிக்கி கொண்டது. இதனால் போக்கு வரத்து நெரிசல் ஏற்பட்டது.

அப்போது கம்பம்மெட்டு சாலை பிரிவில் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீஸ் ஏட்டு தாமரை மாணிக்கம் போக்குவரத்து நெரிசலை சரிசெய்ததார்

வாகனங்கள் தடையின்றி செல்லும் விதமாக சாலையில் இருந்த பள்ளங்களை காவலர் சீருடையிலேயே தான் ஒருவர் மட்டுமே நின்று கற்கள் மற்றும் மணல் கொட்டி சீரமைத்தார்.

YouTube video thumbnail

இதனால் அப்பகுதியில் வாகன ஓட்டிகள் எந்த சிரமமும் இல்லாமல் சென்று வருகின்றனர். இதற்கிடையே போலீஸ் ஏட்டு சாலையை சீரமைத்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையடுத்து, காவலர்களும் சமூக சேவையில் அக்கறை கொண்டவர்கள் என்பதை தாமரை மாணிக்கத்தின் சேவை காட்டுகிறது என்று சமூக ஆர்வலர்கள் பாராட்டியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.