திருவள்ளூர் மாவட்டம், ஆவடி பகுதியில் நிவர் புயலால் தொடர்ந்து மழை பெய்து வருவதை தொடர்ந்து கால்வாய்களில் நீர் வரத்து ஏற்பட்டு ஏரிகளும் நிரம்பி வருகிறது. இதைத் தொடர்ந்து ஆவடி பகுதிகள் மற்றும் ஆவடி-பூந்தமல்லி நெடுஞ்சாலை, பருத்திப்பட்டு ஏரி நீர் சுத்திகரிப்பு நிலையம், திருநின்றவூர் பேரூராட்சி, ஸ்ரீராம் நகர், திருநின்றவூர் பேரூராட்சி ஈசா பெரிய ஏரியில் தமிழ் மொழி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், நகராட்சி நிர்வாகங்களின் ஆணையாளர் மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் க.பாஸ்கரன், ஆட்சியர் பா.பொன்னையா ஆகியோர் வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.