இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சேலத்தில் கிராம நிர்வாக அலுவலர் உள்பட இருவர் தூக்கிட்டு தற்கொலை

சேலத்தில் வெவ்வேறு சம்பவங்களில் கிராம நிர்வாக அலுவலர் உள்பட இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

News image
தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட கிராம நிர்வாக அலுவலர் சரவணன்.
Updated On :29 நவம்பர் 2020, 6:03 am

DIN



சேலம்: சேலத்தில் வெவ்வேறு சம்பவங்களில் கிராம நிர்வாக அலுவலர் உள்பட இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.

சேலம் மாவட்டம் பேளூர் அருகில் உள்ள புழுதிகுட்டை கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி வந்தவர் சரவணன்(42). இவர் சேலம் கன்னங்குறிச்சி பகுதியில் வசித்து வந்தார். குடும்ப தகராறு காரணமாக சனிக்கிழமை இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். அவரை மீட்ட அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் உடற்கூறு ஆய்வுக்காக எடுத்துச் செல்லப்பட்டது. 

இதுகுறித்து கன்னங்குறிச்சி காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே சேலம் காந்தி விளையாட்டு மைதானத்தில் உள்ள மரத்தில் சுமார் 60 வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இறந்து கிடந்தார். அவரது சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்தவர் யார், எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது குறித்து அஸ்தம்பட்டி காவலர்கள் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.