சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் 15,300-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் நேர்காணல்அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலினுடன் இந்திய கம்யூ. தலைவர்கள் தொகுதிப்பங்கீட்டுப் பேச்சுஈரான் மீது இன்று மிகக் கடுமையான தாக்குதல்: டிரம்ப் எச்சரிக்கை!பிகாரில் நிதீஷ்குமாருக்கு நடந்தது தமிழகத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு நடக்கும்! - முதல்வர் மு. க. ஸ்டாலின்கடந்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்காக 4.29 லட்சம் வீடுகள்: தமிழக அரசுகோவை கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிகள் 3 பேருக்கும் வாழ்நாள் சிறை!துபை விமான நிலையத்தில் ஈரான் ட்ரோன் தாக்குதல்: விமான சேவை பாதிப்பு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!கேரள மாநில அரசு வேலை வாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1% இடஒதுக்கீடு!உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதலில் 9 பேர் பலி!அன்னாபெல் சதர்லேண்ட் சதம்..! ஆஸி. மகளிர் 123 ரன்கள் முன்னிலை!தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்
/

காந்தி பிறந்தநாள்: குமரி காந்தி மண்டபத்தில் அபூர்வ சூரிய ஒளி

காந்தியடிகளின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு கன்னியாகுமரி மண்டபத்தில் அமைந்துள்ள அஸ்தி கட்டடத்தில் அபூர்வ சூரிய ஒளி வெள்ளிக்கிழமை விழுந்தது.

News image
காந்தி பிறந்தநாள்: குமரி காந்தி மண்டபத்தில் அபூர்வ சூரிய ஒளி
Updated On :2 அக்டோபர் 2020, 10:29 am

DIN


கன்னியாகுமரி: காந்தியடிகளின் பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு கன்னியாகுமரி மண்டபத்தில் அமைந்துள்ள அஸ்தி கட்டடத்தில் அபூர்வ சூரிய ஒளி வெள்ளிக்கிழமை விழுந்தது.

காந்தியடிகளின் அஸ்தி 1948-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி கன்னியாகுமரி கடலில் கரைக்கப்பட்டது. அஸ்தி கரைப்பதற்கு முன்பாக பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக கடற்கரையில் வைக்கப்பட்டது. அந்த இடத்தில் 1956-ஆம் ஆண்டு அவருக்கு நினைவு மண்டபம் கட்டப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் காந்தியடிகளின் பிறந்த நாளான அக். 2ஆம் தேதி சூரிய கதிர்கள் அங்குள்ள காந்தியின் அஸ்தி கட்டடத்தில் விழும்படி அமைக்கப்பட்டுள்ளது இம்மண்டபத்தின் சிறப்பம்சமாகும்.  

நிகழாண்டு காந்தியடிகளின் ஜெயந்திவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதைமுன்னிட்டு காந்தி அஸ்தி கட்டடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அஸ்தி கட்டடம் முன்பு காந்தியடிகளின் படம் வைக்கப்பட்டிருந்தது. நண்பகல் 12 மணிக்கு அஸ்தி கட்டடத்தில் சூரிய ஒளி விழுந்தது. அப்போது அனைவரும் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். காந்தி மண்டப பொறுப்பாளர் ஜலால் ரகுபதி ராகவ ராஜாராம் என்ற காந்தீய பாடலை பாடினார். 

கரோனா அச்சுறுத்தல் காரணமாக காந்தி மண்டபத்தினுள் குறைந்த அளவில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன், தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய்சுந்தரம் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். 
முன்னதாக காந்தி மண்டபம் முன்பிருந்து நாகர்கோவில் வரையிலான போதை விழிப்புணர்வு ஜோதி ஓட்டத்தை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் மு.வடநேரே, தில்லி சிறப்புப் பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.