6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சீர்காழி, கொள்ளிடம், வைத்தீஸ்வரன்கோயிலில் அதிமுகவினர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்

திமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி கே. பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, ஓ. பன்னீர்செல்வத்துக்கு நன்றி தெரிவித்து அதிமுகவினர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர

News image
சீர்காழியில் அதிமுக சார்பில் வக்கீல் நெடுஞ்செழியன் தலைமையில் பட்டாசுவெடித்து இனிப்புகள் வழங்கிய அதிமுகவினர்கள். 
Updated On :7 அக்டோபர் 2020, 8:43 am

DIN

சீர்காழி: அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி கே. பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, கழக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்துக்கு நன்றி தெரிவித்து அதிமுகவினர்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.

சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே அதிமுக சார்பில் வழக்குரைஞர் நெடுஞ்செழியன் தலைமையில் பட்டாசு வெடித்து,பொதுமக்கள், பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மாவட்ட பிரதிநிதி கார்த்தி, மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் வினோத், ஒன்றிய துணைச் செயலாளர் ரவிச்சந்திரன், பேரூர்கழக துணை செயலாளர் சுகுமாரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர நிர்வாகிகள் விஜி, பாலாஜி, மணி, லாட்ஜ் மணி, அலெக்ஸ், பரக்கத் அலி,  ரவி சண்முகம் பங்கேற்று இனிப்புகளை வழங்கினர்.

Story image

கொள்ளிடத்தில் ஒன்றியச் செயலாளர் நற்குணன் தலைமையில் பட்டாசு வெடித்து, இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் சொக்கலிங்கம், ராஜேந்திரன், ஆனந்த நடராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்று பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்.

அதேபோன்று வைத்தீஸ்வரன்கோயிலில் பேரூர் கழகச் செயலாளர் போகர் ரவி தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. மாவட்ட பொருளாளர் செல்லையன், பால் கூட்டுறவு சங்கத் தலைவர் அஞ்சம்மாள், துணைத் தலைவர் பார்த்த சாரதி, முன்னாள் வார்டு உறுப்பினர் அருள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.