மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி

அதிமுக முதல்வர் வேட்பாளராக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். 

News image
Updated On :7 அக்டோபர் 2020, 12:47 pm

DIN

சென்னை: சென்னை: அதிமுக முதல்வர் வேட்பாளராக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். 

அதிமுக முதல்வர் வேட்பாளர் தொடர்பாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியும் செவ்வாய்க்கிழமை தனித்தனியே தொடர்ந்து நள்ளிரவு 3 மணிவரை ஆலோசனையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்துடன் ஆலோசனை நடத்திய அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் காலை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், புதன்கிழமை காலை 10 மணிக்கு நல்ல செய்தி வரும். மீண்டும் அதிமுக ஆட்சி அதிகாரத்தில் அமர்வதற்கான ஆக்கப்பூர்வமான பணிகள் நடைபெற்று வருவதாக  வைத்திலிங்கம் கூறினார். 

ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் காலை 10 மணிக்கு ஓபிஎஸ்-ஈபிஎஸ் பேட்டியளிக்க உள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், தமிழகத்தில் 2021 இல் நடைபெற் உள்ள சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக முதல்வர் வேட்பாளராக எடப்பாடி கே.பழனிசாமி போட்டியிடுவார் என்று ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். 

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். 

அப்போது முதலில் பேசிய முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி,  2017 ஆம் ஆண்டு அதிமுக பொதுக்குழுவில் முடிவு செய்தபடி கட்சியையும், ஆட்சியையும் வழிநடத்த 11 பேர் கொண்ட வழிகாட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில் துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் 5 பேரும், முதல்வர் பழனிசாமி ஆதரவாளர்கள் 6 பேர் இடம்பெற்றுள்ளனர். 

11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயகுமார், சி.வி. சண்முகம், முன்னாள் அமைச்சர் மோகன், ஜேசிடி பிரபாகர், இரா.கோபாலகிருஷ்ணன், மனோஜ் பாண்டியன், மாணிக்கம் எம்.எல்.ஏ ஆகிய 11 பேர் இடம் பெற்றுள்ளனர். 

வழிகாட்டுதல் குழுவில் பண்ருட்டி ராமச்சந்திரன், பொன்னையன், செங்கோட்டையன், செம்மலை, பொள்ளாச்சி ஜெயராமன், அன்வர்ராஜா, நத்தம் விஸ்வநாதன் போன்ற மூத்த தலைவர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.