கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சீர்காழியில் சரிந்த எரிவாயு தகனமேடை புகைபோக்கி: புகையால் சூழும் நாற்றம்

சீர்காழி எரிவாயு தகனமேடை புகைப்போக்கியை விரைந்து சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

News image
Updated On :8 அக்டோபர் 2020, 6:10 am

DIN


சீர்காழி: சீர்காழி எரிவாயு தகனமேடை புகைப்போக்கியை விரைந்து சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

சீர்காழி ஈசானியத் தெருவில் நகராட்சிக் சொந்தமான எரிவாயு தகணமேடை உள்ளது. சீர்காழி நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களில் ஏதேனும் இறப்பு ஏற்பட்டால்  சடலத்தை இங்கு தான் தகனம் செய்ய வேண்டும்.

ரூ.65 லட்சம் செலவில் கட்டப்பட்டு 2009-ஆம் ஆண்டு முதல் தனியார் அறக்கட்டளை மூலம் இயக்கப்பட்டு வருகிறது. இதுவரை 993 சடலங்கள் எரியூட்டப்பட்டுள்ளன.

Story image

இங்கு சடலங்களை எரிக்கும் போது புகை வெளியேற 100 அடி உயரத்தில் புகைப்போக்கி அமைக்கப்பட்டிருந்தது. இந்த புகைப்போக்கியில் தற்போது 40 அடி உயர புகைப்போக்கி சேதமடைந்து விழுந்துவிட்டது.

இதனால் சடலங்களை எரிக்கும் போது வெளியேறும் புகை அப்பகுதியிலேயே சூழ்வதால் துர்நாற்றமும் , சுகாதார சீர்கேடும் ஏற்படுவதாக அப்பகுதி குடியிருப்பு வாசிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். 

மேலும் அங்குள்ள டைல்ஸ்களும் உடைந்து சேதமடைந்துள்ளது. இதனை விரைந்து சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.