மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட்ட 125 ஆவது ஆண்டு நிறைவு: பென்னிகுயிக் சிலைக்கு அஞ்சலி

தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு முல்லை பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்ட125 ஆண்டுகள்  நிறைவு பெற்றுள்ளதை அடுத்து விவசாயிகள் லோயர் கேம்ப்பில் பென்னிகுக் சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரி

News image
முல்லைப் பெரியாற்றில் மலர்தூவி வழிபாடு நடத்தினர்.
Updated On :10 அக்டோபர் 2020, 7:18 am

DIN

கம்பம்: தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு முல்லை பெரியாறு அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட்ட125 ஆண்டுகள்  நிறைவு பெற்றுள்ளதை அடுத்து விவசாயிகள் லோயர் கேம்ப்பில் பென்னிகுக் சிலைக்கு சனிக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு முல்லைப்பெரியாறு அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

கடந்த1895 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி அணை கட்டிய நாளில் முதன் முதலாவதாக தண்ணீர் திறந்து விடப்பட்டு, இன்று சனிக்கிழமையுடன் 125 ஆண்டுகள் ஆகிறது.

இதனை முன்னிட்டு லோயர் கேம்பில் உள்ள பென்னிகுக் மணிமண்டபத்தில் உள்ள பென்னிகுக்கின் வெண்கல சிலைக்கு 5 மாவட்ட விவசாயிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

125 ஆவது ஆண்டை முன்னிட்டு பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர்.

விழாவில் ஐந்து மாவட்ட விவசாய சங்கத் தலைவர் எஸ். ஆர். தேவர், ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம், பள்ளத்தாக்கு விவசாய சங்க நிர்வாகி பொன்.கட்சி கண்ணன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.