தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் செய்து வரும் தொடர்மழையின் காரணமாக அனைத்து அருவிகளிலும் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குற்றாலம் பகுதியில் கடந்த திங்கள்கிழமை அதிகாலை முதல் பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குளிப்பதற்கு தடை நீட்டிப்பு: கரோனா பொதுமுடக்கம் காரணமாக, குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போதும் தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் சீறிப்பாயும் தண்ணீரை வேடிக்கை பார்த்து செல்கின்றனர்.