குற்றாலம் அருவிகளில் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு

தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் செய்து வரும் தொடர்மழையின் காரணமாக அனைத்து அருவிகளிலும் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குற்றாலம் பேரருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்.
குற்றாலம் பேரருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்.


தென்காசி: தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் செய்து வரும் தொடர்மழையின் காரணமாக அனைத்து அருவிகளிலும் 3-வது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குற்றாலம் பகுதியில் கடந்த திங்கள்கிழமை அதிகாலை முதல் பெய்து வரும் தொடர்மழையின் காரணமாக குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

குளிப்பதற்கு  தடை நீட்டிப்பு: கரோனா பொதுமுடக்கம் காரணமாக, குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போதும் தடை தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் அருவிகளில் சீறிப்பாயும் தண்ணீரை வேடிக்கை பார்த்து செல்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com