மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

முல்லைப் பெரியாறு அணையில் சாரல் மழை: நீர்வரத்து அதிகரிப்பு

முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்குள் நீர்வரத்து அதிகரித்து வருகிறது.

News image
முல்லைப் பெரியாறு அணை
Updated On :15 அக்டோபர் 2020, 7:47 am

DIN


கம்பம்: முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைக்குள் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. வியாழக்கிழமை நிலவரப்படி, அணைக்கு 4,157 கன அடி தண்ணீர் வரத்து வந்தது.

முல்லைப் பெரியாறு அணையில் வடகிழக்கு பருவமழை காரணமாக, நீர்பிடிப்பு பகுதிகளான முல்லையாறு, பெரியாறு, தேக்கடி ஏரி ஆகிய பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்து வருகிறது.

அக்.13 இல் (செவ்வாய்க்கிழமை) வினாடிக்கு 1,529 கன அடியாகவும், புதன்கிழமை வினாடிக்கு 2,406 கன அடியாகவும், வியாழக்கிழமை 4,157 கன அடியாகவும் தண்ணீர் அணைக்கு வந்தது.

அணை நிலவரம்: வியாழக்கிழமை காலை நிலவரப்படி, அணையின் நீர்மட்டம்  128.35 அடி உயரமும், அணையில் 4 ஆயிரத்து 342 மில்லியன் கன அடி தண்ணீர் கொள்ளளவாக இருந்தது. அணைக்குள் வினாடிக்கு 4,157 கன அடி தண்ணீர் வந்தது. 1,400 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. பெரியாற்றில் 51 மில்லி மீட்டர், தேக்கடி ஏரியில் 24.4 மில்லி மீட்டர் மழையும் பெய்தது.

மின் உற்பத்தி: பெரியாறு அணையிலிருந்து வினாடிக்கு 1,400 கன அடி தண்ணீர் வந்த நிலையில், லோயர் கேம்பில் உள்ள பெரியாறு மின்சார உற்பத்தி நிலையத்தில் மூன்று மின்னாக்கிகளிலும், 42 மெகாவாட் என 126 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.