அதிமுக 49 ஆம் ஆண்டு தொடக்க விழா: சொந்த கிராமத்தில் முதல்வர் கட்சி கொடி ஏற்றினார்

அதிமுக 49 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தனது சொந்த ஊரான எடப்பாடி சிலுவம்பாளையம் கிராமத்தில் சனிக்கிழமை காலை கட்சி கொடி ஏற்றி வைத்தார்.
அதிமுக 49 ஆம் ஆண்டு தொடக்க விழா: சொந்த கிராமத்தில் முதல்வர் கட்சி கொடி ஏற்றினார்



சேலம்: அதிமுக 49 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தனது சொந்த ஊரான எடப்பாடி சிலுவம்பாளையம் கிராமத்தில் சனிக்கிழமை காலை கட்சி கொடி ஏற்றி வைத்தார். கட்சி தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினார்.

தாயாரின் மறைவை முன்னிட்டு எடப்பாடி சிலுவம்பாளையம் கிராமத்தில் தங்கியிருப்பதால் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி சொந்த கிராமத்தில் வீட்டு எதிரில் சனிக்கிழமை காலை 8.30 மணி அளவில் கட்சி கொடியை ஏற்றி வைத்தார். இதில் அதிமுக நிர்வாகிகள், கட்சி தொண்டர்கள் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com